முல்லைத்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் முத்துஐயன்கட்டு நீரேந்துப் பகுதியில் 116 மீமீ மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு அதிக மழைவீழ்ச்சி காரணமாக 24’00” கொள்ளளவுள்ள முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23’06” ஆகிய நிலையில் 4 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 2 வான்கதவுகள் 09″ 2 வான்கதவுகள் 1’3″ திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed